கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ‘அவலோகிதேஸ்வர போதிசத்வா’ என தன்னைப் பிரகடனப்படுத்திய மஹிந்த கொடிதுவாக்கு, ஜனவரி 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பௌத்த போதனைகளுக்கு முரணான சமயச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கொடிதுவாக்கு ஜனவரி 12ஆம் திகதி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்த நிலையில் நேற்று ஜனவரி 15ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த மாத தொடக்கத்தில், பௌத்த தகவல் மையத்தின் தலைவர் வண. அகுலுகல்லே ஸ்ரீ ஜினாநந்த தேரர் கொடிதுவாக்கு பௌத்த சமூகத்தை தவறாக வழிநடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் கொடிதுவாக்கு பௌத்த சமூகத்தை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம் சுமத்திய வண. அகுலுகல்லே ஸ்ரீ ஜினாநந்த தேரர், அண்மையில் உயிரிழந்த ருவான் பிரசன்ன குணரத்ன என்ற போதகர் தனது திரிபுபடுத்தப்பட்ட போதனைகளின் மூலம் ‘பாரிய தற்கொலை’யை ஊக்குவித்து, பின்னர் தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையில், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வண.பலாங்கொட கஸ்ஸப தேரர், இந்த தன்னை ‘போதிசத்துவர்’ என தன்னை பிரகடனப்படுத்தியவர் தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தனது சொந்த மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறியதுடன், அதை ‘அபினிஷ்க்ரமனையா’ (பெரிய புறப்பாடு) என்று அழைத்ததாகவும் தெரிவித்தார்.