1996 ஆம் ஆண்டு நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 52 வயதுடைய சந்தேகநபருக்கு மரண தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர், இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதோடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து மரண தண்டனை அமுலுக்கு வரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.