கொழும்பின் சில பகுதிகளில் நாளை (17) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 8.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பத்தளை நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் வெட்டுக்குள்ளாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.