இராணுவத்தில் கடமையாற்றும் கோப்ரல் ஒருவரின் தனியார் வீட்டின் சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 235 ரவைகளை அங்குனகொலபலஸ்ஸ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின் பின்னர், பரவகும்புக பள்ளத்தாக்கு பகுதியில் வைத்து பொலிஸாரால் பவிக்கப்படாத ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி, வீட்டின் மேல் தளத்தில் உள்ள சமையலறையில் எரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வீட்டில் இருந்த இராணுவ அதிகாரியின் மனைவி தோட்டாக்களுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவ கோப்ரல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.