ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை உண்மையாக நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (24) கண்டியில் உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், அறிக்கையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.