மேலும் 07 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் இதுவரையில் 51 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுவை சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.