ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வகித்த தேசிய அமைப்பாளர் பதவிக்கு புதிய தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்,
இதன்படி, கொழும்பு விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் புதன்கிழமை கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.