பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் கஞ்சிபான இம்ரானை பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலிம், சந்தேக நபர் முதலில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிய பொலிஸார், சந்தேகநபரை பிரதிநிதித்துவப்படுத்திய குற்றவியல் சட்ட சங்கத்தின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்து சந்தேகநபருக்கு பொதுச் சட்டத்தின் கீழ் பிணை வழங்க முடியும் என்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரினர்.
இதன்படி, குறித்த சந்தேக நபரை 50 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததையடுத்து, அவரை இன்று விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டதுடன், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.