நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எச் ரிஸ்பின் அவர்களினால் கல்முனை பிராந்தியத்தில் தாய்மார்களை வலுப்படுத்தும் நோக்கில் போசாக்கு மற்றும் வீட்டு நிதி முகாமைத்துவம் வங்கிகளுடனான தொடர்பு என பல்வேறு கோணங்களில் தாய்மார்களை பாதுகாப்பதற்காகவும் சிசுக்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்குமான ஒரு நாள் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.ஏ வாஜித் விசேட உரை ஒன்றை நிகழ்த்தியதுடன் தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியும் பிராந்தியத்தில் போசாக்கினை மேம்படுத்துவதற்கான திட்டம் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது தாய்மார் வீட்டிலே நிதி முகாமைத்துவத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி விரிவான விளக்கம் ஒன்றையும் வழங்கி இருந்தார். குறித்த நிகழ்வில் பங்கு பற்றிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் உத்தியோகத்தர்கள் இப் பயிற்சி பட்டறை மூலம் பெற்றுக்கொண்ட அறிவை கிராம மட்டங்களுக்கு கொண்டு செல்ல இருக்கின்றனர்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.