விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு நீண்ட கால வெளிநாட்டு பயணங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என விவசாய அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
இதன்படி, விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட மத்திய அரசின் விவசாயத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு நீண்டகால வெளிநாட்டுப் பயணத்திற்கான அனுமதியை வழங்குவதில்லை என மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், விவசாய அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாகாண விவசாய கலந்துரையாடலில் இது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.