நுவரெலியாவில் மாத்திரமன்றி ஆபத்தான இடங்களிலும் எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், அதற்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கான வரைபை தயாரிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
மேலும், நாளை முதல் நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட விதிகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை விதிக்க அமைச்சர்கள் சபை நேற்று தீர்மானித்துள்ளது.