உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும், எந்தவொரு பிரிவினருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமரும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாராளுமன்றத்தை கலந்தாலோசிக்காமல் இறுதி முடிவுகள் எட்டப்படாது எனவும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் நியாயமாக இருக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேற்று (07) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் தலைமையில் பிரதமர் இதனைத் தெரிவித்துடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கம்புர மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த, இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் தாமதம் காரணமாக எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டததோடு இவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டாலும், சில நிறுவனங்களில் பணிகள் முறையாக நடைபெறாமல் இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப, தற்காலிக பணிகளை மேற்கொள்வதில், இந்த ஊழியர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளதுடன் இணைப்புகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் அருகிலுள்ள நிறுவனத்திற்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.
அத்தோடு, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதுடன் இந்நிலையை மாற்றுவதற்கு தேவையான சட்ட திருத்தம் கொண்டு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது அவ்வாறு இல்லாவிட்டால், பாராளுமன்றத்தில் வேட்புமனுவை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான யோசனையும் இங்கு முன்வைக்கப்பட்டது.
மேலும், கள உத்தியோகத்தர்கள் தமது தேர்தல் அதிகார வரம்பில் வாக்குகளை கோருவதற்கு உள்ள தடைகளை நீக்குவதற்காக தயாரிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்தின் செயற்பாடுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதோடு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக சட்டமூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மசோதா தொடர்பான பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
இதன்படி, உள்ளுராட்சி மன்றங்கள் தற்போது உள்ளூராட்சி ஆணையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலையிட வேண்டியதன் அவசியத்தை சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ஊடாக பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகளை துரிதப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை மாகாண ஆளுநர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.
இதேவேளை, மாகாண அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உரிய இடமாற்றங்கள் வழங்கப்படாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாக உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியதோடு அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.
மேலும், முன்னாள் பிரதேச செயலாளர் திஸ்ஸமஹாராம ஊடகங்களுக்கு தெரிவித்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பாக உடனடி அறிக்கை வரவழைக்கப்பட்டு, தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப இடமாற்றம் கோரப்பட்டதாக கடிதமும் வந்துள்ளதா தெரியவந்ததுடன் இவ்வாறான அறிக்கையை வெளியிடுவது நியாயமானதல்ல எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், வயங்கொடை உள்ளூராட்சி மன்றங்கள் உட்பட உள்ளூராட்சி சபைகளை மாநகர சபைகளாக மாற்றும் செயற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் இதுபோன்ற 85 கோரிக்கைகள் இருப்பதும் தெரியவந்துள்ளதோடு இதற்கான பணிகளை விரைவுபடுத்த தேவையான அறிவுரைகளை பிரதமர் வழங்கினார்.
மேலும், 2020 பட்டதாரி பயிலுனர் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதியான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக நிரந்தர நியமனம் வழங்கப்படாதவர்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்ததோடு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் பிரதமரின் செயலர் தலைமையிலான ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
அத்தோடு, அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சுமார் 30,000 பல்நோக்கு திணைக்கள ஊழியர்களை தற்போதைய பதவிகளில் அமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன் அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.