விவசாயத்துறையில் இளைஞர் சமூகத்தை ஈர்க்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராம வேலைத்திட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 06 கிராமங்களுக்கு இளைஞர் விவசாய தொழில் முயற்சி கிராமங்கள் என பெயரிடப்பட்டு நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்தோடு, அதிக வருமானம் ஈட்டக்கூடிய மரக்கறிகள், பழங்கள் மற்றும் பூச்செடிகள் தொடர்பில் தற்போது இளைஞர் சமூகத்தின் அதிக பிரதிநிதித்துவம் காணப்படுவதாக விவசாய அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.