பொலிசார் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது இளைஞர் உயிரிழந்ததினைத் தொடர்ந்து, பிரான்சின் பாரிஸில் தொடங்கிய பொதுப் போராட்டங்கள் விளைவினை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, 150க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்தோடு, காவல்துறை உத்தரவை மதிக்காமல், சம்பந்தப்பட்ட இளைஞர் கார் ஓட்டிச் சென்றுள்ளார், பின்னர் அவர் காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதினைத் தொடர்ந்து இளைஞரை எப்படி சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இரண்டாவது நாளாக தொடரும் போராட்டத்தை கருத்தில் கொண்டு, பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தொடர் விசாரணையில் உயிரிழந்தவர் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் எனத் தெரியவந்துள்ளதோடு 2017 ஆம் ஆண்டு முதல், போக்குவரத்து சம்பவங்களில் பிரெஞ்சு காவல்துறையினரால் கொல்லப்பட்ட பலர் கருப்பின மக்கள் அல்லது அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான கொலைச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் காவல்துறை மீது குற்றம் சுமத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.