இந்த வார இறுதியில் லிதுவேனியாவில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பிரிட்டன் சென்றுள்ளார்.
இதன்படி, அமெரிக்கா ஜனாதிபதி தனது பிரிட்டன் பயணத்தின் போது பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மூன்றாம் சார்லஸ் மன்னர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
மேலும், அமெரிக்கா ஜனாதிபதி மற்றும் பிரித்தானிய பிரதமருக்கு இடையிலான சந்திப்பில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.