உக்ரைனுக்கான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகுவதாக ரஷ்யா இன்று (17) அறிவித்துள்ளது.
இதன்படி, முக்கியமான தானிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என ஐக்கிய நாடுகள் சபை, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என நம்புவதாகவும், ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து அடுத்த மாதம் அவரை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மேற்கத்திய தலைவர்கள் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.