பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு திடீரென தடை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதன்படி, உள்ளூர் அரிசி விலை உயராமல் தடுக்க வேண்டும் எனவும் கடந்த பருவத்தில் பெய்த கனமழையால் இந்தியாவின் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த 12 மாதங்களில் மாத்திரம் அரிசியின் விலை 11 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, உலகில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதோடு உலக அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது.
கோதுமை மாவு உள்ளிட்ட உக்ரைன் தானியங்கள் தொடர்பாக ரஷ்யா கடுமையான முடிவை எடுத்ததை அடுத்து இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கோதுமை மாவு உட்பட உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பான போக்குவரத்துக்கு அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா இந்த வாரம் விலகியதை அடுத்து உணவு விநியோகச் சங்கிலி ஏற்கனவே அழுத்தத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.