குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டாவை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் முல்லேரியாவில் உள்ள அநுர பாலித பெரேராவின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 20 இலட்சம் ரூபா மற்றும் முச்சக்கர வண்டியை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபரால் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று அழைக்கப்பட்ட போது, பிரதிவாதியான ஹரக் கட்டா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பதோடு குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.