சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர்களின் தேசிய நிறுவகத்தின் கூற்றுப்படி, சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் சில முகவர் நிலையங்கள் பயிற்சியற்ற சுற்றுலா வழிகாட்டிகளை வேலைக்கு அமர்த்துவதால் சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர்களின் தேசிய நிறுவகத்தின் தலைவர் மனோஜ் மத்தகே, மேலும் தெரிவிக்கையில் இந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கத் தவறியதன் காரணமாக, நாடு பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் இதனால் சுற்றுலாத்துறை தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதற்காக நாட்டில் சுற்றுலா சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.