பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு விஜயத்திற்காக நாட்டிற்ககு விஜயம் செய்யவுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, நாளை இரவு இலங்கை வரும் அவர் சனிக்கிழமை காலை வரை தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பிராந்திய மற்றும் சர்வதேச சவால்கள் குறித்து விவாதிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தற்போது பசிபிக் பிராந்தியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிப்பதுடன் இதற்கிடையில் அவசர விஜயமாக அவர் இலங்கைக்கு வரவுள்ளார் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் நாட்டிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்றும் ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.