இலங்கையில் பிறந்து தற்போது கனடாவில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான கேரி ஆனந்த சங்கரிக்கு அந்நாட்டில் அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் கேரி ஆனந்த சங்கரிக்கு இவ்வாறு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, கேரி ஆனந்த சங்கரி பழங்குடியின உறவுகள் அமைச்சராக பதவி வகிக்கிப்பதோடு அவர் முன்னர் உள்நாட்டு உறவுகள் அமைச்சரின் பாராளுமன்ற செயலாளராகவும், கனடாவில் பாரம்பரிய மற்றும் பன்முக கலாச்சார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், கேரி ஆனந்த சங்கரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வி ஆனந்த சங்கரியின் மகனும் ஆவார்.