நாட்டுக்கு அவசரமாகத் தேவைப்படும் மருந்துகளை அவசரகால கொள்வனவுகளின் கீழ் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, அவசரகால கொள்வனவுகளின் கீழ் சுமார் 160 வகையான மருந்துகளை கொள்வனவு செய்யவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
அத்தோடு, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்குவதே இதன் நோக்கம் எனவும் இதன் கீழ் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் 65 வகையான மருந்துகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதோடு தற்போது கையிருப்பில் உள்ள புற்றுநோய்க்கான மருந்துகள் போதுமானதாக இருந்தாலும், அவசரமாக கொள்முதல் செய்யாவிட்டால் போதுமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொள்முதல் செயல்முறை மூலம் மருந்துகளை இறக்குமதி செய்ய பொதுவாக 9 மாதங்கள் எடுக்கும் எனவும் அப்படி நடந்தால், தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு மேலும் மோசமடையும் என்பதினால் அவசரகால விலையில் மருந்துகளை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளேதாகவும் இதன்கீழ் சுமார் 03 மாதங்களில் மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வர முடியும் எனவும் அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அவசர கொள்முதல் செய்யப்பட்டாலும், அவற்றின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.