கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி குன்றின் மீது கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்படி, கொழும்பில் இருந்து ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் படுகாயமடைந்த ஐவர் ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், காயமடைந்த மீதமுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்திசையில் இருந்து முன்னோக்கிச் வந்த பேருந்திற்கு வழிவிட முற்பட்ட போது விபத்துக்குள்ளான பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 100 பேர் பயணித்ததாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.