பெற்றோல் விலை அதிகரிப்பால் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்குமா என்ற கேள்வி தற்போது நிலவும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டதோடு 92 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் பிரிமியம் டீசல் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு இதன் புதிய விலை 348 ரூபாயாகவுள்ளதுடன் ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு சிலோன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் லங்கா ஒயிட் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன்.லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு இதன் புதிய விலை 306 ரூபாயாகவுள்ளது.
மேலும், மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 226 ரூபாவாகவுள்ளது.