சிறுநீரகம் அகற்றப்பட்ட சம்பவத்தின் பின்னர், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே நீதவான் இந்த அறிவித்தலை விடுத்துள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையில், குழந்தை ஒரு சிறுநீரகத்துடன் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த இந்த அறிக்கை முரண்பாடானது என தெரிவித்த நீதவான், சட்ட வைத்திய அறிக்கையின் அடிப்படையில் மாத்திரம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் ஆராய்ந்த பின்னர் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சியின் விசாரணைக்காக ஆகஸ்ட் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.