
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை வான் நடவடிக்கை சான்றிதழை வழங்கியுள்ளது.
இதன்படி, எயார் ஏசியா – அபுதாபி விமான சேவை நிறுவனத்திற்கு நேற்று விமான நடவடிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் திறமையான விமானச் செயல்பாடுகளைப் பேணுவதற்கான விமான நிறுவனத்தின் நிறுவன அமைப்பு மற்றும் திட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த விமான நிறுவனம் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து தனது விமானச் செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது.