இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் வீட்டுத் திட்டங்களை நகருக்கு வெளியே நிர்மாணித்து, நகரத்தில் பெறுமதியான காணிகளை முதலீட்டிற்காக வழங்கினால், நாட்டின் பொருளாதாரம் உயர் நன்மைகளை அடைய முடியும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு சினமண்ட் கிரான்ட் ஹோட்டலில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற கட்டிடக் கலைஞர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எதிர்காலத்தில், நாட்டிலும், வெளிநாட்டிலும் கட்டிடக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவிலும் அதற்கான வாய்ப்புகள் உள்ளதோடு அதற்கான அழைப்புகள் ஏற்கனவே வந்துள்ளதினால் கட்டிடக் கலைஞர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி. வளர்ச்சி மற்றும் நல்ல பெயரையும் உருவாக்க வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளார்.