
தலிபான்களின் கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மற்றுமொரு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பாடசாலை கல்வியை தடை செய்ய தலிபான் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, தலிபான் ஆட்சிக்கு ஏற்ப, தலிபான் அதிகாரிகள் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் உள்ள பாடசாலை முதல்வர்களிடம் அனைத்து பெண் மாணவர்களையும் மூன்றாம் வகுப்பிலிருந்து பாடசாலைக்குள் அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தொடர்ச்சியான கடுமையான விதிகள் வழங்கப்படுள்ளது.
இதன்படி, பெண்கள் பூங்காக்களில் நேரத்தை செலவிடவும், சுகாதார மையங்களில் சேரவும், அழகு நிலையங்களுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பெண்கள் அரச வேலைகளில் பணியாற்றுவதற்கும் தலிபான் ஆட்சி தடை விதித்துள்ளதாகவும், பெண்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.