நிகழ் நிலை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று (03) பிற்பகல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என சமூக செயற்பாட்டாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, நிகழ் நிலை பாதுகாப்பு மசோதாவின் விதிகள் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட சில அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர் மேலும் தெரிய்வித்துள்ளதோடு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்றும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவைக் கோரி தரிந்து உடுவரகெதர இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, சர்ச்சைக்குரிய சில அம்சங்களுக்காக விமர்சிக்கப்பட்ட போதிலும், மிகவும் விவாதிக்கப்பட்ட நிகழ் நிலை பாதுகாப்பு மசோதா இன்று காலை பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.