இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுத்து இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு ஆதரவளிக்க முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக சீனா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் ஆதரவு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளில் தாங்கள் இணைந்து கொள்வதாகவும், நெருங்கிய தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிதி நிறுவனங்கள் அனைத்து கடன் வழங்குநர் சந்திப்புகளிலும் பார்வையாளர்களாகப் பங்கேற்று, கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மற்ற கடன் வழங்குநர்களுடன் நட்புரீதியான தொடர்பைப் பேணி வருவதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தியோகபூர்வ கடன் வழங்குனராக, சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது, செப்டம்பர் மாத இறுதியில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கையுடன் தற்காலிகமாக உடன்பட்டுள்ளதாகவும் “மற்ற கடன் வழங்குநர்கள் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் கடன் பிரச்சினைக்கு தீர்வுகளை தேடுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் டர்ஹெரிவித்துள்ளார்.