நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பெய்ஜிங் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்துள்ளார்.
இதன்படி, இருதரப்பு கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தையும் விரிவான ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்துவதற்கு இரு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.
அத்தோடு, சர்வதேச ஒத்துழைப்புக்கான 3வது பெல்ட் அன்ட் ரோடு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ஒக்டோபர் 16ஆம் திகதி பெய்ஜிங்கை சென்றடைந்தார்.
மேலும், சீனா அரசாங்கம் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் (பிஆர்ஐ) 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்த கூட்டத்திற்காக வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் தலைவர்கள் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ள நிலையில் சர்வதேச ஒத்துழைப்புக்கான 3வது பெல்ட் அண்ட் ரோடு மன்றம் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் புதன்கிழமை (18) தொடங்கியதுடன் மாநாட்டின் போது, உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்ப்பதில் அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், பெல்ட் அண்ட் ரோடு உடன் இணைந்த விரிவான கொள்கைகளின் தொகுப்பை சீனா ஜனாதிபதி வெளியிட்டார்.
அத்தோடு, 3வது பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி மன்றத்தின் திறப்பு விழா பெய்ஜிங்கில் உள்ள மதிப்பிற்குரிய கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பில் நடந்ததோடு இதில் சுமார் 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.