காஸாவிலிருந்து எகிப்திற்குள் செல்வதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியினை காஸா எல்லை ஊடாக வெளியேற்றுவது தொடர்பான அதிகாரசபை வழங்கியுள்ளதுடன் இன்று எகிப்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் 15 நாடுகளை சேர்ந்த 596 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, குறித்த 17 இலங்கையர்களின் பெயர் விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளதோடு இன்றைய தினம் ராஃபா எல்லை ஊடாக 17 இலங்கையர்கள் எகிப்திற்குள் செல்லவுள்ளனர்.
மேலும், காயமடைந்த பலஸ்தீனர்களில் முதல் குழுவினரும் மருத்துவ வாகனங்கள் மூலம் எகிப்துக்குள் சென்றுள்ளதாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.