சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறையின் கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயலில் ஆண் ஒருவரினுடைய சடலம் இன்று (29) காலை இனங்காணப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 03 நாட்களாக வயலுக்கு வருகை தந்தவர் வீடு திரும்பவில்லை எனவும் குறித்த நபர் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் தபால் வீதி, குறுமன்வெளி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சதீஸ்கரன் (41 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.