நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் அமைச்சர் பாராளுமன்றத்தில் அண்மையில் ஆற்றிய உரையை சவாலுக்குட்படுத்தி இன்று (29) சட்டத்தரணி ஒருவரினால் இது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரணசிங்கவுக்கு எதிராக தகுந்த தண்டனைகளை வழங்குமாறும் மனுதாரர் தரப்பு நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளது.