2024 ஆம் ஆண்டளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு இலாபம் ஈட்ட முடியாத பட்சத்தில் அதனை தனியார் மயமாக்க வேண்டியிருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த நிலையைத் தவிர்க்க போக்குவரத்துச் சபையை இலாபம் ஈட்டும் அமைப்பாக மாற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2024ல் பல டிஜிட்டல் திட்டங்களை செயல்படுத்த இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.