மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 08 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரசங்கத்தின் போது பல மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக விமர்சிக்கப்பட்ட குறித்த மதபோதகர் நீதிமன்ற உத்தரவின்படி,வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது கருத்துக்களால் பல மாதங்களுக்கு பிறகு நேற்று புதன்கிழமை (29) காலை கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்தார்.
இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம், மதபோதகர் பெர்னாண்டோ நாட்டிற்கு வந்தவுடன் அவரைக் கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டதோடு நாட்டை வந்தடைந்ததும் 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சைபர் கிரைம் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்த நிலையில் 08 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.