யூ கே. காலித்தீன்
இன்று வெளியான க. பொ. த சாதாரண தர பரிட்சை முடிவுகளின் படி மொத்தமாக 23 மாணவர்கள் 9A சித்திகளையும், 11 மாணவர்கள் 8A சித்திகளையும், பெற்றுள்ளனர்.
இச் சாதனை கல்முனை கல்வி மாவட்டத்தில் ஒரு பாடசாலை பெற்ற அதி சிறந்த பெறுபேறு என்பதோடு தென்கிழக்கு பிராந்தியத்தின் ஆண் பாடசாலையொன்று பெற்ற சிறந்த பெறுபேறும் ஆகும்.
அதேநேரம் பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களில் முதன்மை இடத்தை கல்முனை சாஹிராக் கல்லூரி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதற்காக பாடுபட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருந்தகைகள் அனைவருக்கும் சஹிரியன் 93/96 கல்வி கற்ற பழைய மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.