டயானா, சுஜித் மற்றும் ரோஹன ஆகியோருக்கு சபையில் இருந்து தடை விதிக்கும் பிரேரணை இன்று (02) பாராளுமன்றத்தில் 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைக்கப்பெற்றன.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.