இந்திய கடன் வரியின் கீழ் மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் திருப்திகரமாக இல்லை எனவும், இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அலுத்கே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு விசாரணை சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்துவது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்தினார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்யுமாறும் சஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.