மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய மின்சார மசோதாவின் வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை நிறுவுவதற்கு இது உதவுவதோடு வரைவுச் சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டால், 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டமும், 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டமும் நீக்கப்படும்.
மேலும், 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மின்சாரத் துறைக்கான ஒழுங்குபடுத்தும் வரைவு மசோதா முன்மொழிவதோடு 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் எண் நிறுவனச் சட்டத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களை இணைப்பதற்குப் பொருந்தக்கூடிய சட்டபூர்வ நடவடிக்கைகளை இது வழங்குகின்றது.