சீனா உரக்கப்பல் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிபதி அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதன்படி இன்று (08) சுயாதீன விசாரணைக்காக நீதியரசர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வழங்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் சீனா உரக் கப்பல் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சீனா உரம் இறக்குமதியினால் 6.7 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் கேட்கப்பட்ட வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.