எதிர்வரும் ஜனவரி மாதம் மின் கட்டணத்தை மீளாய்வு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் மின்சாரக் கட்டணம் திருத்தப்பட்டாலும், இம்மாதம் பெய்யும் மழையுடன் நீர் மின் நிலையங்களைத் திருத்த முடியும் எனத் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் 12ஆம் திகதி மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் குழு கூடவுள்ளதாகவும், மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் ஏதேனும் யோசனைகள் இருப்பின் அவற்றை அங்கு முன்வைக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.