ஹபராதுவ, தல்பே வடக்கு பகுதியில் இன்று (09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதன்படி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் வேடமிட்ட இனந்தெரியாத குழுவொன்று குறித்த நபரை அவரது வீட்டில் இருந்து காரில் கடத்திச் சென்று வீதியோரம் கைவிடுவதற்கு முன்னர் சுட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தொடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பின்னர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதான இவர் மாத்தறை நாவிமன பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் சந்தேக நபர்களை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.