அரச அதிகாரிகளுக்கு அடுத்த வருடத்திற்கான விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த 4,000 ரூபா தொகையானது முன்பணமாக அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பிப்ரவரி 29 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
திறைசேரியின் உடன்படிக்கையின் பேரில், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இது குறித்து அறிவித்துள்ளார்.
மேலும், குறித்த முன்பணத்தினை 2024 ஆம் ஆண்டிற்குள் வசூலிக்க வேண்டும் எனவும் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.