“அஸ்வெசும” நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2024 ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நலன்புரி நலத்திட்டத்தின் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் முதல் கட்டத்தை அமுல்படுத்தும் போது எழுந்த பிரச்சினைகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் இந்த மீளாய்வின் போது பரிசீலிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான “அஸ்வெசும” கொடுப்பனவுகள் 1,406,930 பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு பயனாளிகளின் எண்ணிக்கையை 02 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் நம்புவதாகவும், நலன்புரி உதவிகளைப் பெறுவதற்கு மிகவும் பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்யவும் அரசாங்கம் செயற்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டார்..
மேலும், 2024 இல் “அஸ்வெசும” கொடுப்பனவுகளுக்காக 205 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.