தற்போது அதிகபட்ச கொள்ளளவில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், 2024 ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள கட்டண திருத்தத்தின் போது மின் கட்டணங்கள் முந்தைய கட்டணங்களுக்கு குறைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த விஜேசேகர, கடந்த ஒக்டோபர் மாதத்தில் புதைபடிவ எரிபொருளின் பாவனையினால் ஏற்படும் அதிக மின்சார உற்பத்திச் செலவை கருத்திற்கொண்டு முன்னைய கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
“இருப்பினும், தற்போது வானிலை மாறிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மழை பெய்து வருவதாலும், மழை இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாலும், கட்டண திருத்தத்தின் போது, உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும்,” எனவும் சுட்டிக்காட்டினர்.
மேலும், எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் கட்டணத் திருத்தத்தின் போது, டிசம்பர் மாதம் இலங்கைச் சபையின் இருப்புநிலைக் கணக்குகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு சில நிவாரணங்களை வழங்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.