ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் புகைப்பட ஸ்டுடியோ மென்பொருள் அமைப்பில் படங்களை பதிவேற்றுவதற்கான அதிகபட்ச கட்டணத்தை திருத்தியமைத்து பொது பாதுகாப்பு அமைச்சகம் ஒரு வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞர் அதிகபட்சமாக 400 ரூபாவினை செலுத்திய பிறகு, தேசிய அடையாள அட்டையின் நகலைப் பெற விண்ணப்பிக்கும் நபரின் நிலையான இணக்க டிஜிட்டல் படத்தைப் பதிவேற்றவும், அதன் பிறகு விண்ணப்பதாரருக்கு புகைப்படக் குறிப்புச் சீட்டு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2016 மே மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், ஒருவரின் புகைப்படத்தின் மூன்று நகல்களை வழங்குவதற்கு பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரிடமிருந்து 150 ரூபாய் வசூலிக்கப்பட்டதோடு தேசிய அடையாள அட்டை பதிவைத் தொடர்ந்து குறித்த நகலை பெறக்கூடியதாக இருந்தது.
புதிய அறிக்கையின் ஊடாக, 2016 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு ஜனவரி 2024 முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும், புதிய விண்ணப்பதாரர்களுக்கு தொடக்கத்தில் டிஜிட்டல் அடையாள அட்டைகளை அரசாங்கம் வழங்குவதோடு அதன்பின் படிப்படியாக அனைத்து குடிமக்களுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படுவதக்கவும் தெரிவிக்கப்படுகின்றது.