நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வட மாகாணத்தில் உள்ள 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதன்படி, கிளிநொச்சியில் 08 பாடசாலைகளும், வவுனியாவில் 01 பாடசாலையும், முல்லைத்தீவில் 07 பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, மோசமான காலநிலை தணிந்ததன் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என வடமாகாண ஆளுநர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.