பல மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பிணை மனு மீதான விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) நிர்ணயித்துள்ளது.
இதன்படி, தானே முன்னிறுத்தப்பட்ட தீர்க்கதரிசியின் பிணை மனு ஜனவரி 04, 2024 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படஉள்ளதோடு குறித்த வழக்கு இன்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்தி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது பிரசங்கங்களில் ஒன்றின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அதில் பௌத்த மதம் மற்றும் பிற மதங்களை இழிவுபடுத்தும் அறிக்கைகள் உள்ளடக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.