தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில், இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நாட்டின் நெடுஞ்சாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் சந்திப்பு அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
பொலிஸ் விசேட அதிரடிப் படை அதன் தற்போதைய கடமைகளில் இருந்து விலக்கிக் கொள்வதுடன், இந்தப் பணிகளை முறைப்படி மீள் ஒதுக்கீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உரையாடல் ஆராயப்பட்டது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, பொறுப்புகளை கையாள மாற்று அமைப்பை உருவாக்குவது குறித்து பங்கேற்பாளர்கள் ஆய்வு செய்ததோடு குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவை அதன் உடனடித் தயாரிப்பை முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார்.
மேலும், சாலை அபிவிருத்தி அதிகாரசபையின் முறையான மேற்பார்வையுடன், இந்தப் பணிகளை மிகவும் பொறுப்பான மற்றும் முறையாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதே இலக்காகும் எனவும் இந்த சந்திப்பின் போது, வேலைத்திட்டத்தை விரைவாக அபிவிருத்தி செய்து சமர்ப்பிக்குமாறும் சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
அத்தோடு, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவுடன் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.